ய(எ)ம்மாவெனும் நண்பனின் அலறல் கேட்டு
சும்மா கழிவறையில் முக்கிக்கொண்டிருந்தவன் பதரிப்பார்த்தால்
எம்மா ஸ்டோனுக்கு ஆஸ்காரென இளித்தான்
ஒம்மா உன்ன ஓடவிட்டு
அடிக்க வராதீர்கள்.இன்று காலையில் ஒரு மணி நேரம் வெண்பா பற்றி பார்த்ததன் விளைவு. மாச்சீர், விளச்சீர், காய்ச்சீர்,ஈற்றடி,ஈற்றுச்சீர், தேமா, புளிமா என்று தலையே சுற்றிவிட்டது. எனவே வெண்பாவுக்கான இலக்கணம் இல்லை என்றாலும் இன்னிசைக்கான இலக்கணத்துடன் இந்த இன்னிசை வெண்பா. நான்கு சீர்களிலும் எதுகை, இரண்டாம் அடியில் தனிச்சொல் இல்லாமை என்ற இலக்கணத்தின் படி மட்டும் . இந்த இன்னிசை வெண்பா(?) ஆஸ்கார் விருது வாங்கிய எம்மா ஸ்டோனுக்கு சமர்ப்பணம்.யாராவது ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எம்மாவுக்கு அனுப்பி வைத்தால் நன்றியுடையவனாய் இருப்பேன்.எதுகை முக்கியம்.